இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

ரஜினி நடித்த 'கூலி' படம் வெளியாகி நல்ல வசூலையும் கொடுத்தது. அடுத்து அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவருகிறது.
ஒவ்வொரு படம் வெளியான பிறகு அடுத்த படம் தொடங்குவதற்கு முன்பு ரஜினி இமயமலைக்கு ஆன்மிக பயணம் செய்வது வழக்கம். உடல்நலக்குறைவாக இருந்த காலத்தில் மட்டும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை.
'வேட்டையன்' படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். 'கூலி' படம் வெளியாகும் முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.

இந்நிலையில் தற்போது ஒருவார கால பயணமாக இமயமலை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற அவர், ரிஷிகேஷ் சென்று சேர்ந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் தங்கிய ரஜினி நாளை இமயமலை சென்று பாபாவை தரிசித்து விட்டு திரும்புகிறார்.
முன்னதாக இன்று அவர் பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் அவரது நண்பர்களும் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன.