எம்.ஜி.ஆருக்கு எழுதிய கதையில் சிவாஜி | பிளாஷ்பேக்: முதல் இரண்டாம் பாக படம் | மணிமேகலை விஷயத்தில் குரேஷி அந்தர் பல்டி! | அரசியல் கேள்வி என்னிடம் கேட்காதீங்க : ரஜினி டென்ஷன் | ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' |
சாண்டோ சின்னப்பா தேவர் அப்போது
பெரிய தயாரிப்பாளர், அவரது மருமகன் எம்.ஏ.திருமுகம் பெரிய இயக்குனர்.
இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்துதான் படம் எடுப்பார்கள். எப்போது
வேண்டுமானாலும் எம்ஜிஆர் இவர்களை அழைத்து படம் எடுக்கச் சொல்வார். மறு
பேச்சு இல்லாமல் இவர்கள் எடுப்பார்கள். இதற்கான கதையை எப்போதும் தயாராக
வைத்திருப்பார்கள். அப்படி அவர்கள் எம்ஜிஆருக்காக எழுதிய கதைதான்
'தர்மராஜா'. இந்த கதையில் எம்ஜிஆர் நடிக்க தாமதமானதால் இந்த கதையை சிவாஜியை
வைத்து எடுத்தார்கள். 1980ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழகத்திலும்,
இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது.
இதில் சிவாஜி ஜோடியாக
கே.ஆர்.விஜயாவும், வில்லனாக கே.பாலாஜியும் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன்,
மனோரமா, புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கோழையாக இருப்பவன்
திடீர் வீரனாகிற வழக்கமான கதைதான். சிவாஜி அப்பாவியான கோவில் பூசாரி.
கோவிலில் சாமி சிலையை திருட வருகிற கே.பாலாஜி சாமி சிலையை திருடிவிட்டு
சிவாஜியின் தங்கையையும் கெடுத்து விட்டு சென்று விடுவார். அப்பாவியான
சிவாஜி தனது பூசாரி கெட்அப்பை துறந்து பக்கா ஹீரோவாகி, வெளிநாடெல்லாம்
சென்று எப்படி பாலாஜியை பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
எம்.ஜி.ஆருடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இந்த படத்தை தேவர் எடுத்தார் என்றும்,
எம்ஜிஆரே இந்த கதையை சிவாஜியை வைத்து எடுங்கள் என்று சொன்னதாகவும் இரண்டு
தகவல்கள் உண்டு.