'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

250 படங்களுக்கு மேல் நடித்த ஹீரோயின் வெண்ணிற ஆடை நிர்மலா. சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் அவர் தனது குடும்பத்துடன் கேரளாவிற்கு குடும்ப விழா ஒன்றுக்காக சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் புணலூர் அருகே வந்தபோது விபத்தில் சிக்க, நிர்மலா கண் முன்னால் அவரது அண்ணன் துடிதுடித்து இறந்தார்.
சென்னை கொண்டு வரப்பட் நிர்மலா இங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் நிர்மலாவை மருத்துவமனையில் சந்தித்து அவரது சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர், “உனது அண்ணன் இறந்து விட்டாலும் கடவுள் உன்னை காப்பாற்றி இருப்பது ஏன் தெரியுமா, உன் கடமையில் நீ எதையோ பாக்கி வைத்திருக்கிறாய். அந்த பாக்கி கலை. அதை செய்” என்றார். இந்த வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த நிர்மலா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்பிறகு நிர்மலா எம்ஜிஆர் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தார். குறிப்பாக ஜானகியை அம்மா என்றே அழைப்பார். எம்.ஜி.ஆர் வீட்டு சமையல் வேலைகளில்கூட ஜானகிக்கு உதவி செய்வார். பின்னாளில் எம்ஜிஆர் வற்புறுத்தல் காரணமாக அதிமுக.,வில் இணைந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகியால் போடி தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்டார். ஜானகி மறைந்ததும் நிர்மலாவும் அதிமுகவை விட்டு விலகினார். பின்னாளில் பா.ஜ., கட்சியில் சேர்ந்தார்.




