ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரீகாந்த். சிவாஜி ராவ் என்ற பெயர் பாலச்சந்தருக்கு பிடிக்கவில்லை. காரணம் ஏற்கனவே ஒரு சிவாஜி இருப்பதால் இன்னொரு சிவாஜி வேண்டாம் என்று கருதி அவருக்கும் காந்த் என்று முடிகிற ஒரு பெயரை தேடும் போது, அவரது வழக்கறிஞரான ரஜினிகாந்தின் பெயரையே அவருக்கு வைத்தார்.
இந்த இரண்டு 'காந்த்'ளும் அப்பொழுது வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு போட்டியும் இருந்தது. சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதில் முக்கியமான படம் 'சதுரங்கம்'. துரை இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியும் ஸ்ரீகாந்தும் நேர் எதிரான கேரக்டர்களைக் கொண்ட சகோதரர்களாக நடித்தனர் நடித்திருந்தனர்.
படத்தின் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்னை உருவானது. 'நான் சீனியர் நடிகர் என் பேரைத்தான் முதலில் போட வேண்டும்' என்று ஸ்ரீகாந்த் சொல்ல, 'எனக்குத்தான் ரசிகர்கள் அதிகம், அதனால் என் பெயரை தான் முதலில் போட வேண்டும்' என்று ரஜினிகாந்த் சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் இயக்குனர் துரை.


இறுதியில் இருவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் என்று டைட்டில் போடும்போது, ஸ்ரீகாந்த் புகைப்படம் இருக்கும். ஸ்ரீகாந்த் என்று டைட்டில் போடும்போது ரஜினிகாந்த் புகைப்படம் இருக்கும். இது இருவருக்குமே திருப்தியை தந்தது.
'பைரவி' படம் வெளிவந்த போதும் இதே பிரச்சனை உருவானது. இருவர் பேரையும் ஒரே கார்டில் போட்டு சமாளித்தார் தயாரிப்பாளர். ஆனால் படத்துக்கு வெளியே தயாரிப்பாளர் தாணு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்து ஒரே படத்தில் ரஜினியை உயர்த்தி வைத்து விட்டார்.




