சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரீகாந்த். சிவாஜி ராவ் என்ற பெயர் பாலச்சந்தருக்கு பிடிக்கவில்லை. காரணம் ஏற்கனவே ஒரு சிவாஜி இருப்பதால் இன்னொரு சிவாஜி வேண்டாம் என்று கருதி அவருக்கும் காந்த் என்று முடிகிற ஒரு பெயரை தேடும் போது, அவரது வழக்கறிஞரான ரஜினிகாந்தின் பெயரையே அவருக்கு வைத்தார்.
இந்த இரண்டு 'காந்த்'ளும் அப்பொழுது வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு போட்டியும் இருந்தது. சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதில் முக்கியமான படம் 'சதுரங்கம்'. துரை இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியும் ஸ்ரீகாந்தும் நேர் எதிரான கேரக்டர்களைக் கொண்ட சகோதரர்களாக நடித்தனர் நடித்திருந்தனர்.
படத்தின் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்னை உருவானது. 'நான் சீனியர் நடிகர் என் பேரைத்தான் முதலில் போட வேண்டும்' என்று ஸ்ரீகாந்த் சொல்ல, 'எனக்குத்தான் ரசிகர்கள் அதிகம், அதனால் என் பெயரை தான் முதலில் போட வேண்டும்' என்று ரஜினிகாந்த் சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் இயக்குனர் துரை.


இறுதியில் இருவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் என்று டைட்டில் போடும்போது, ஸ்ரீகாந்த் புகைப்படம் இருக்கும். ஸ்ரீகாந்த் என்று டைட்டில் போடும்போது ரஜினிகாந்த் புகைப்படம் இருக்கும். இது இருவருக்குமே திருப்தியை தந்தது.
'பைரவி' படம் வெளிவந்த போதும் இதே பிரச்சனை உருவானது. இருவர் பேரையும் ஒரே கார்டில் போட்டு சமாளித்தார் தயாரிப்பாளர். ஆனால் படத்துக்கு வெளியே தயாரிப்பாளர் தாணு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்து ஒரே படத்தில் ரஜினியை உயர்த்தி வைத்து விட்டார்.




