'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. வரும் அக்., 10ம் தேதி படம் வெளியாக உள்ளதால் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 20) மாலை நடைபெற இருக்கிறது. இதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினி.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொள்ள, ‛‛வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. கூலி படப்பிடிப்பு சிறப்பாக போகிறது'' என்றார்.
தொடர்ந்து அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க சற்றே டென்ஷனான ரஜினி, ‛‛அரசியல் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்'' என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.