பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
உதிரிபூக்கள், முள்ளும் மலரும் போன்ற உயர்ந்த படைப்புகளை தந்த மகேந்திரன் அடிப்படையில் எழுத்தாளர். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை, கங்கா, திருடி, தங்கபதக்கம் உள்ளிட்ட பல படங்களின் கதை இவருடையது. அந்த வரிசையில் மகேந்திரன் எழுதிய நாடகம்தான் 'ரிஷி மூலம்'. சென்னை மேடையில் நடத்தப்பட்டு வந்த இந்த நாடகத்தை எஸ்.பி.முத்துராமன் அதே பெயரில் படமாக இயக்கினார்.
பல வருடங்கள் பிரிந்து வாழும் கணவன், மனைவியை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைப்பது மாதிரியான கதை. இதில் கணவனாக சிவாஜியும், மனைவியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். 1980ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 100 நாளை கடந்து ஓடியது. 100வது நாளில் படத்தின் தயாரிப்பாளர் சிவாஜிக்கு வைர மோதிரம் பரிசளித்தார்.
15 வருடங்களுக்கு பிறகு கணவனும், மனைவியும் சந்தித்து கொள்ளும் வசனமே இல்லாத 5 நிமிட காட்சி இன்றளவுக்கும் பேசப்படுகிறது. வெறும் முக பாவத்திலேயே அன்பு, காதல், பிரிவு, சோகம், மகிழ்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருப்பார்கள் சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும்.