பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் புயல்வீச தொடங்கி உள்ளது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இதே போன்று மற்ற மொழி திரையுலகிலும் பாலியல் தொல்லை இருக்கிறது. அதற்கும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கிறது என்று பிரபல நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பாலியல் தொல்லை இருந்துள்ளது. எனக்கு முந்தைய மூத்த நடிகைகள் இதுகுறித்து என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினை சினிமா உலகத்தில் புதிதாக இப்போது தோன்றியது அல்ல. ஆனால் தற்போது திரைத்துறையில் உள்ள பெண்களின் பிரச்னையைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக பேச யாரும் முன்வரவில்லை. அதனால் அங்கே எதுவுமே நடக்கவில்லை என சொல்ல முடியாது.
ஆனால் கேரளாவில் தான் பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். எதிர்த்து குரல் கொடுத்தனர். இங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக போராடுகின்றனர்.
சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்பின் போதுதான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படியென்றால் பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் சந்திக்க கூடாது.
யார் நல்லவர்? யார் கெட்டவர்? என தேடிப்பார்த்து சட்டம் வகுக்க முடியாது. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்து விட்டார் என்பதால் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது. அது விசாரிக்கப்பட வேண்டும். சிலர் ஒருவரின் நன்மதிப்பைக் கெடுக்கவும் கூட பொய்யான புகாரை அளிக்கலாம். எனவே எந்த விஷயமாக இருந்தாலும் விசாரணை தேவை. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விசாரணை முக்கியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




