என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை, உடைமைகளை இழந்தனர். அந்த சமயத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இந்திய துணை ராணுவமும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு பலரின் உயிரை காப்பாற்றினர்.
குறிப்பாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்காக துணை ராணுவத்தினர் அமைத்த ஒரு தற்காலிக பாலம் மூலமாக மீட்பு பணி விரைவாக நடைபெற்று உயிரிழப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டது. இதற்கு அப்போதே பொதுமக்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் இருவரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 122 இன்பான்ட்ரி பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்து தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவர்களை கவுரவித்துள்ளனர். இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.