விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பலத்த புயலை கிளப்பி உள்ளது. தோண்ட தோண்ட வரும் பூதம்போல பாலியல் புகார்கள் குவிந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரையுலககை சேர்ந்த 153 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டிருப்பதாவது : நீதிபதி ஹேமா குழு அறிக்கையில், மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான பணி சூழலை உருவாக்க தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்த விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.