'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பலத்த புயலை கிளப்பி உள்ளது. தோண்ட தோண்ட வரும் பூதம்போல பாலியல் புகார்கள் குவிந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரையுலககை சேர்ந்த 153 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டிருப்பதாவது : நீதிபதி ஹேமா குழு அறிக்கையில், மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான பணி சூழலை உருவாக்க தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்த விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.