இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது கேரள சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் தேதி தொடங்கியது. விழாவை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் தொடங்கி வைத்தார். சிலி நாட்டு இயக்குனர் பாப்லோ லாரோ இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடக்க விழாவுக்கு பின்னர் ஆன் மேரி ஜாசிர் இயக்கிய 'பாலஸ்தீன் 36' என்ற படம் திரையிடப்பட்டது. வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் துருக்கி, வியட்நாம், பாலஸ்தீன், கொரியா, ஸ்பெயின் உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 படங்கள் 26 பிரிவுகளில் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில் இந்த விழாவில் 19 படங்களை திரையிட திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து நேற்று திரைப்பட விழா நடைபெறும் வளாகங்கள் முன், ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் திரைப்பட விழா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட விழாவில் அரசியல் புகுந்து விட்டதாக பரவலான கருத்து உருவாகி உள்ளது.




