ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மலையாள சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 8 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட முதல் 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. சதித் திட்டத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வழக்கில் திலீப் விடுதலை செய்யப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தீர்ப்பை பலரும் நேரடியாகவே விமர்சித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறினார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.




