ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை, உடைமைகளை இழந்தனர். அந்த சமயத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இந்திய துணை ராணுவமும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு பலரின் உயிரை காப்பாற்றினர்.
குறிப்பாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்காக துணை ராணுவத்தினர் அமைத்த ஒரு தற்காலிக பாலம் மூலமாக மீட்பு பணி விரைவாக நடைபெற்று உயிரிழப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டது. இதற்கு அப்போதே பொதுமக்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் இருவரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 122 இன்பான்ட்ரி பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்து தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவர்களை கவுரவித்துள்ளனர். இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.