புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை, உடைமைகளை இழந்தனர். அந்த சமயத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இந்திய துணை ராணுவமும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு பலரின் உயிரை காப்பாற்றினர்.
குறிப்பாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்காக துணை ராணுவத்தினர் அமைத்த ஒரு தற்காலிக பாலம் மூலமாக மீட்பு பணி விரைவாக நடைபெற்று உயிரிழப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டது. இதற்கு அப்போதே பொதுமக்களிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் இருவரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 122 இன்பான்ட்ரி பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்து தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவர்களை கவுரவித்துள்ளனர். இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.