சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் மோகன்லால் தற்போதும் கைவசம் நான்கு படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் முதன்முறையாக இயக்குனராக மாறி தான் இயக்கியுள்ள பரோஸ் படத்தை இயக்கி முடித்து வரும் செப்டம்பரில் அதை ரிலீஸ் செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து தான் சேர்த்த சொத்துக்களை பதுக்கி வைத்து மறைந்த நிலையில் அதை பாதுகாக்கும் பாதுகாவலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார்.
தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதை முடித்துவிட்டு நேரடியாக மும்பை வந்தார் மோகன்லால். அங்கே பரோஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து மும்பையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்காக அங்கே உள்ள பிவிஆர் திரையரங்கில் பரோஸ் படத்தின் டிரைலரை திரையிட்டு காட்டியுள்ளார் மோகன்லால். இது படத்தின் ஓடிடி மற்றும் ஹிந்தி உரிமை தொடர்பான வியாபாரத்திற்காக என்று சொல்லப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக வரும் செப்டம்பரில் இந்த படம் வெளியாக இருக்கிறது.