எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? |

நடிகர் மோகன்லால் தற்போதும் கைவசம் நான்கு படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் முதன்முறையாக இயக்குனராக மாறி தான் இயக்கியுள்ள பரோஸ் படத்தை இயக்கி முடித்து வரும் செப்டம்பரில் அதை ரிலீஸ் செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து தான் சேர்த்த சொத்துக்களை பதுக்கி வைத்து மறைந்த நிலையில் அதை பாதுகாக்கும் பாதுகாவலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார்.
தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதை முடித்துவிட்டு நேரடியாக மும்பை வந்தார் மோகன்லால். அங்கே பரோஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து மும்பையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்காக அங்கே உள்ள பிவிஆர் திரையரங்கில் பரோஸ் படத்தின் டிரைலரை திரையிட்டு காட்டியுள்ளார் மோகன்லால். இது படத்தின் ஓடிடி மற்றும் ஹிந்தி உரிமை தொடர்பான வியாபாரத்திற்காக என்று சொல்லப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக வரும் செப்டம்பரில் இந்த படம் வெளியாக இருக்கிறது.