திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

தமிழ், தெலுங்கு திரையுலகத்திற்கு ஈடாக தற்போது கன்னடத் திரையுலகமும் வளர்ந்துள்ளது. 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் கன்னடத் திரையுலகத்தை இந்திய அளவில் பேச வைத்த படங்களாக அமைந்தன.
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே உள்ளன. அருமையான தட்பவெப்ப நிலை கொண்ட அந்த ஊரில் அரசு சார்பில் பிலிம் சிட்டி எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தற்போது மைசூரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசுகையில் அதை அவர் அறிவித்தார்.
மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமார் கன்னட சினிமாவுக்காக பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று எப்போதோ கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்நிலையில் மைசூரில் அரசு சார்பில் 100 ஏக்கர்நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிபிபி மாடலில் அங்கு விரைவில் அரசு பிலிம் சிட்டி அமைக்கப்படுமென முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு சார்பில் ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.