பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பெ. அமுதா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி (எ) முரளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி.எஸ்.முருகன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செந்தில், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சிமாவின் தற்போதைய நிலவரம், பையனூரில் அமைக்கப்பட்டு வரும் திரைப்பட நகரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.