மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் பெ. அமுதா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என். இராமசாமி (எ) முரளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி.எஸ்.முருகன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செந்தில், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சிமாவின் தற்போதைய நிலவரம், பையனூரில் அமைக்கப்பட்டு வரும் திரைப்பட நகரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.