சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
மறைந்த பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் முதல் படத்திலேயே தனது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவரது மகன் ஷம்மி திலகனும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் புதிய பரிமாணம் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஷம்மி திலகனின் மகன் அபிமன்யுவும் தனது தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி நடிகராக திரையுலகில் நுழைந்துள்ளார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்த வரும் மார்க்கோ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிமன்யு. இந்த வாய்ப்பு தனக்கு நடிகர் உன்னி முகுந்தன் மூலமாகவே தேடி வந்தது என்று கூறும் அபிமன்யு, தனது தாத்தாவின் பெயரை தந்தை காப்பாற்றி விட்டார். இவர்கள் இருவரின் பெயருக்கு எந்த பாதிப்பும் வந்து விடாத அளவிற்கு அவர்களது பெயரை நானும் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.