கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ஜவான் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை ஒரு பக்கம் கவனித்து வருகிறார் இயக்குனர் அட்லி. இன்னொரு பக்கம் இரண்டு பாலிவுட் கம்பெனிகளுடன் இணைந்து தற்போது பேபி ஜான் என்கிற படத்தையும் ஹிந்தியில் தயாரித்து உள்ளார். ஜீவா நடித்த கீ என்கிற திரைப்படத்தை இயக்கிய காலீஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வருண் தவான் நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதை முன்னிட்டு மும்பையில் பிரபல நடிகர் கபில் சர்மா நடத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினருடன் கலந்து கொண்டார் இயக்குனர் அட்லி.
இந்த நிகழ்ச்சியில் அட்லியிடம் கேள்வி கேட்ட கபில் சர்மா கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் அவரது தோற்றம் குறித்து ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அட்லியும் அமைதியான முறையில் கபில் சர்மாவுக்கு பதிலடி கொடுத்து வாயை அடைத்தார். ஆனாலும் இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி கபில் சர்மாவுக்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி சின்மயி தன்னுடைய கடுமையான கண்டனத்தை கபில் சர்மாவுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காமெடி என்கிற பெயரில் இதுபோன்று நிறத்தை வைத்து அநாகரிகமாக கேள்வி கேட்கும் பழக்கத்தை இவர்கள் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் செல்வாக்கை பெற்றுக் கொண்டுள்ள கபில் சர்மா போன்றவர்கள் இப்படி பேசுவது துரதிஷ்டவசமானது. அதே சமயம் ஆச்சரியப்படக்கூடியது அல்ல” என்று கூறியுள்ளார்.