பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுனின் 22வது படாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகும் இந்தப் படத்தில் 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' ஒன்று அனைவரிடமும் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படம் முடியும் வரை படம் குவித்த எந்த ஒரு தகவலையும் யாரும் வெளியில் சொல்லக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஆங்கிலத்தில், 'Non Disclosure Agreement'. இதை 'ரகசிய ஒப்பந்தம்' என்றும் கூட சொல்லலாம். அதாவது படத்தின் ரகசியம் எதையும் வெளியில் சொல்லக் கூடாது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற உள்ளார்கள். கடந்த மூன்று வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் தடைபட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஹாலிவுட் கலைஞர்களும் படத்தில் பணியாற்ற உள்ளதால் எந்த விதத்திலும் படத்திற்கு சிக்கல் வராத அளவிற்கு படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளார்களாம்.