பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று வரும் நிலையில், சூரிக்கு அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய மகனுக்கும், சூரிக்கும் இடையேயான பாசப் போராட்டமே படத்தின் கதைகளமாக கொண்டு உருவாகி வருகிறது. ஸ்வாசிகா 'லப்பர் பந்து' படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மனைவியாக நடித்திருந்தார்.