புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று வரும் நிலையில், சூரிக்கு அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய மகனுக்கும், சூரிக்கும் இடையேயான பாசப் போராட்டமே படத்தின் கதைகளமாக கொண்டு உருவாகி வருகிறது. ஸ்வாசிகா 'லப்பர் பந்து' படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மனைவியாக நடித்திருந்தார்.