நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
நடிகர் பிரித்விராஜ் பிஸியான நடிகராக மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மூலமாக வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய அவர், அதன்பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா தேவ் என்பவர் தற்போது குஜராத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த வரதராஜ மன்னர் என்கிற கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் தான். அந்த படத்தில் இவரது நடிப்பு பிடித்து போய்விட தான் இயக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்து விட்டார் பிரித்விராஜ்.