'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

நடிகர் பிரித்விராஜ் பிஸியான நடிகராக மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மூலமாக வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய அவர், அதன்பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா தேவ் என்பவர் தற்போது குஜராத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த வரதராஜ மன்னர் என்கிற கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் தான். அந்த படத்தில் இவரது நடிப்பு பிடித்து போய்விட தான் இயக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்து விட்டார் பிரித்விராஜ்.




