என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஆரம்பமாகும் என்று தகவல் வெளியானது. தேர்தல் முடிவுகள் வந்த ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இதுவரையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
ரஜினிகாந்த் தான் நடித்து வந்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை அவசரப்படுத்தி முடிக்க வைத்தார். 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் அப்படி செய்தார் என்றார்கள். இந்நிலையில் 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகி வருவது குறித்து ரஜினிகாந்த் தனது வருத்தத்தை சற்றே கோபமாக வெளிப்படுத்தியதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கான திரைக்கதையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார் லோகேஷ். ஆனால், இன்னமும் அதை முடிக்கவில்லையாம். முழு திரைக்கதையையும் படித்துப் பார்க்காமல் வரமாட்டேன் என ரஜினி சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல். இன்னும் சில நாட்களில் அதை முடித்துக் கொடுப்பதாக லோகேஷ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளதாம். அதனால், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.