தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் தனது காதலியான பவித்ரா கவுடாவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த ரேணுகா சுவாமி என்பவரை கூலிப்படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சட்டப்படி விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும், குற்றவாளிகள் இரக்கம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கொலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.