நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் தனது காதலியான பவித்ரா கவுடாவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த ரேணுகா சுவாமி என்பவரை கூலிப்படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சட்டப்படி விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும், குற்றவாளிகள் இரக்கம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கொலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.