பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் தனது காதலியான பவித்ரா கவுடாவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த ரேணுகா சுவாமி என்பவரை கூலிப்படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சட்டப்படி விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும், குற்றவாளிகள் இரக்கம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கொலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.