இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் தற்போது இந்தியன் 3-ஆகவும் விரிவடைந்துள்ளது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜூலை 12ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் மே 22ம் தேதியான இன்று ‛இந்தியன் 2' படத்திலிருந்து ‛பாரா...' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பா.விஜய் எழுதி உள்ள இந்த பாடலை அனிருத், ஸ்ருத்திகா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். தாய் மண்ணிற்காக போராடும் வீரனை பற்றிய தேச பக்தி பாடலாக வெளியாகி உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை, குரல் ஆகியவை அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக ‛‛என் தாய் மண் மேல் ஆனை... இது தமிழ் மானத்தின் சேனை... அட வெள்ளை இரத்தம் தொட்டு... இனி வாளில் என்று சானை...'' என்ற வரிகள் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி ‛பாரா' பாடல், தெலுங்கில் ‛சவுரா'வாகவும், ஹிந்தியில் ‛ஜாகோ...' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ல் நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.