அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் தற்போது இந்தியன் 3-ஆகவும் விரிவடைந்துள்ளது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜூலை 12ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் மே 22ம் தேதியான இன்று ‛இந்தியன் 2' படத்திலிருந்து ‛பாரா...' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பா.விஜய் எழுதி உள்ள இந்த பாடலை அனிருத், ஸ்ருத்திகா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். தாய் மண்ணிற்காக போராடும் வீரனை பற்றிய தேச பக்தி பாடலாக வெளியாகி உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை, குரல் ஆகியவை அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக ‛‛என் தாய் மண் மேல் ஆனை... இது தமிழ் மானத்தின் சேனை... அட வெள்ளை இரத்தம் தொட்டு... இனி வாளில் என்று சானை...'' என்ற வரிகள் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி ‛பாரா' பாடல், தெலுங்கில் ‛சவுரா'வாகவும், ஹிந்தியில் ‛ஜாகோ...' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ல் நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.