விரைவில் தமிழ் சினிமா ஸ்டிரைக்...? | கல்கியின் அன்னா பென் கதாபாத்திர போஸ்டர் வெளியானது | விஜய்சேதுபதியின் ரசிகராகவே மாறிப்போன ஜோஜூ ஜார்ஜ் | கருடன் வெற்றி : உன்னி முகுந்தனை தேடி வந்த பொருளாளர் பதவி | அமெரிக்காவில் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'கல்கி 2898 ஏடி' | பின் வாங்கிய கமல் ? - சிம்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… | அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி'' நடிகர்கள் வாய் திறந்தனர் : முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம் | 'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ? | இவானா வருண் நடிக்கும் 'ராஞ்சா' | புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு தனது பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். இதில் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் முழு வீச்சில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித். ஜூன் மாதம் இறுதியில் இருந்து விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் திட்டப்பட்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விடும் அஜித், அடுத்தபடியாக சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியிருக்கும் அவர் ஏற்கனவே அஜித் இடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் ராஜாவும் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையும் அஜித்துக்கு பிடித்து விட்டதால், கைவசம் உள்ள இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக சிவா, மோகன் ராஜா ஆகிய இருவரின் படங்களிலும் நடிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.