விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். இதில் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் முழு வீச்சில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித். ஜூன் மாதம் இறுதியில் இருந்து விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் திட்டப்பட்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விடும் அஜித், அடுத்தபடியாக சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியிருக்கும் அவர் ஏற்கனவே அஜித் இடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் ராஜாவும் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையும் அஜித்துக்கு பிடித்து விட்டதால், கைவசம் உள்ள இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக சிவா, மோகன் ராஜா ஆகிய இருவரின் படங்களிலும் நடிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.




