20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடித்திருந்தார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் இதுவரை 90 படங்கள் வரை வெளியாகி உள்ளது. அவற்றில் இந்தபடம் தான் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தந்தது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் இப்போது உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் அரண்மனை 4ம் பாகம் ரூ.60 கோடி வசூலைக் கடந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.