ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடித்திருந்தார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் இதுவரை 90 படங்கள் வரை வெளியாகி உள்ளது. அவற்றில் இந்தபடம் தான் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தந்தது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் இப்போது உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் அரண்மனை 4ம் பாகம் ரூ.60 கோடி வசூலைக் கடந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.