பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடித்திருந்தார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் இதுவரை 90 படங்கள் வரை வெளியாகி உள்ளது. அவற்றில் இந்தபடம் தான் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தந்தது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் இப்போது உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் அரண்மனை 4ம் பாகம் ரூ.60 கோடி வசூலைக் கடந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.