ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

2024ம் ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படம் என்ற பெருமையைப் பெற்ற படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கம் நடிப்பில், கதாநாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்க இப்படம் இந்த மாதம் 3ம் தேதி வெளியானது. இரு தினங்களுக்கு முன்பு இப்படம் 25வது நாளைத் தொட்டது. கடந்த வாரம் 100 கோடி வசூலையும் கடந்தது. அதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இந்த வருடம் வெளிவந்த படங்களில் 25 நாட்களைக் கடந்த படங்களாக “அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, வடக்குபட்டி ராமசாமி, லவ்வர், சைரன்,” ஆகியவை அமைந்தன. அந்த வரிசையில் தற்போது 'அரண்மனை 4' படமும் சேர்ந்துள்ளது. முந்தைய 25 நாள் படங்கள் அத்தனை நாட்கள் ஓடினாலும் லாபம் தராத படங்களாகவே இருந்தன. 'அரண்மனை 4' மட்டும்தான் லாபத்தையும் தந்த படமாக அமைந்தது.
'அரண்மனை 4' படம் வெற்றி பெற்றதால் இயக்குனர் சுந்தர் சி 'அரண்மனை 5' படத்தையும் உருவாக்க வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் தமிழில் முதல் முறையாக உருவாகும் 5ம் பாகப் படம் என்ற பெருமையைப் பெறும்.