கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்று சிரஞ்சீவி குடும்பம். அவருடைய தம்பிகள், தம்பி மகன்கள், என பலரும் நடிகர்களாக உள்ளனர். சிரஞ்சீவியின் கடைசி தம்பியான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார்.
நாளை நடைபெற உள்ள ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஜனசேனா, தெலுங்கு தேசம், பா.ஜ., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். நேற்றுடன் அங்கு பிரசாரம் முடிவடைந்தது.
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், அவரது அம்மா சுரேகா நேற்று பித்தாபுரம் சென்றிருந்தனர். அங்குள்ள குக்குடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். பித்தாரபுரத்தில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கும் சென்று பவன் கல்யாணை சந்தித்து தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பாவுமான அல்லு அரவிந்த் உடனிருந்தார்.
அப்பா அல்லு அரவிந்த், பவன் கல்யாணை சந்தித்து வாழ்த்து சொல்லி, மகன் அல்லு அர்ஜுனோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடும் அவருடைய நண்பர் ரவிசந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார்.