விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்று சிரஞ்சீவி குடும்பம். அவருடைய தம்பிகள், தம்பி மகன்கள், என பலரும் நடிகர்களாக உள்ளனர். சிரஞ்சீவியின் கடைசி தம்பியான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார்.
நாளை நடைபெற உள்ள ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஜனசேனா, தெலுங்கு தேசம், பா.ஜ., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். நேற்றுடன் அங்கு பிரசாரம் முடிவடைந்தது.
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், அவரது அம்மா சுரேகா நேற்று பித்தாபுரம் சென்றிருந்தனர். அங்குள்ள குக்குடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். பித்தாரபுரத்தில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கும் சென்று பவன் கல்யாணை சந்தித்து தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பாவுமான அல்லு அரவிந்த் உடனிருந்தார்.
அப்பா அல்லு அரவிந்த், பவன் கல்யாணை சந்தித்து வாழ்த்து சொல்லி, மகன் அல்லு அர்ஜுனோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடும் அவருடைய நண்பர் ரவிசந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார்.