20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த குறும்படமான "காலம் மாறுமா" (சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை)-க்கு 2024 ம் ஆண்டிற்கான அமீரக தமிழ் குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான சிறப்பு விருது பெற்றது.
துபாய், ஈரானியன் கிளப்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடுவராகப் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி பங்கேற்றார். சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை உண்டாக்கியதற்காக இக்குறும்படத்தை உருவாக்கிய துபாயில் வசிக்கும் தமிழக மாணவர்களாகிய அனன்யா மணிகண்டன் மற்றும் ஷியாம் மணிகண்டனை பாராட்டினார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன், ‛‛இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN STG) நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் குறிக்கோளின் 13வது இலக்கு ஆகும். அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும்'' என கூறி இந்த குறும்படத்தையும், மாணவர்களது முயற்சியையும் பாராட்டினார்.