கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் | மோகன்லால், மம்முட்டி படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை இயக்க தயாராகும் விஸ்வரூபம் எடிட்டர் | முக்கிய காட்சிகள் கட், பாம்புடன் வந்த ரசிகர் : கலீஜா ரீ ரிலீஸ் கலாட்டா | தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் | கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75 வயதில் சென்னையில் நேற்று காலமானார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சீரியல், டப்பிங் ஆர்டிஸ்ட், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்டவர்.
சினிமாவில் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர், கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவர். திடீரென நேற்று காலை காலமானது குறித்து விசாரித்தால், அவர் ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் செய்து இருக்கிறார். சமீபத்தில் துபாய் போயிட்டு வந்தார். அங்கே உள்ள உணவு, தண்ணீர் அவருக்கு செட் ஆகவில்லை. துபாயிலிருந்து சளி தொந்தரவு உடன் வந்துள்ளார். தவிர, அலைச்சல் வேறு. அந்த டென்ஷன் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்தவாரம் அவர் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதை பார்க்காமலே போய்விட்டார். தனது தந்தை, தாய், மனைவி கல்லறை இருக்கும் இடத்தில் தனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கல்லறை கட்டிவிட்டார். அதை ஒரு பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார். அந்த கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகத்தை கூட முன்பே முடிவு செய்துவிட்டார்.
அவர் மகள் கனடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். நாளை அவர் வந்துவிடுவார். ராஜேஷின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜேஷின் உடல் நேற்று எம்பார்மிங் செய்யப்பட்டுள்ளது. மகள் வர வேண்டி இருப்பதால் எம்பார்மிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.