நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். 'அலிபாபா' படத்தின் மூலம் ஹீரோவானார். கற்றது களவு, கழுகு, கழுகு 2, வல்லினம், யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், பண்டிகை, களரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனாலும் கிருஷ்ணாவால் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. கடைசியாக 'ராயர் பரம்பரை' படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படம் 'ஜோஸ்வா இமைபோல் காக்க'. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ள இந்த படத்தில் அவர் ஹீரோ வருனுடன் மோதும் வில்லனாக நடித்திருக்கிறார். கிருஷ்ணாவின் புதிய வில்லன் அவதாரம் அவரது கேரியருக்கு கை கொடுக்குமா என்பது படம் வெளிவந்ததும் தெரியவரும். படம் வருகிற மார்ச் 1ம் தேதி வெளிவருகிறது.
படத்தில் நடித்திருப்பது குறித்து கிருஷ்ணா கூறும்போது, "கவுதம் மேனன் தனது படத்தில் சிறிய துணை கதாபாத்திரத்தைக் கூட சிறப்பாக வடிவமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து விடுவார். அப்படி இருக்கும்போது, இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தயங்காமல் ஒப்புக்கொண்டேன். இதில் சவாலான ஸ்டன்ட்கள் இருந்தாலும் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டேன் .
கவுதம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆக்ஷனுக்கு என வரையறுத்த எல்லைகளைத் தாண்டி நானும், வருணும் நடித்துள்ளோம். படம் பார்வையாளர்களுக்கு பரபரப்பான அனுபவம் தருவதோடு அவர்கள் மகிழும்படியான தருணங்களையும் கொண்டிருக்கும்" என்றார்.