நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு பிசியான நடிகை ஆனார். தற்போது பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜவான், ஆர்டிகள் 370, தெலுங்கில் வெளியான பாமகலாபம் 2 படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியாமணி மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியாமணி 'மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்சி' என்ற நவீன ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 75 லட்சம். குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று காரை வாங்கிய அவர் தனது மகிழ்ச்சியை அங்கு கேக் வெட்டி கொண்டாடினார். சமீபத்தில் பிரியாமணி ஐதராபாத்தில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது. பிரியாமணிக்கு பெங்களூரிலும் சொந்த வீடு உள்ளது.