'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு பிசியான நடிகை ஆனார். தற்போது பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜவான், ஆர்டிகள் 370, தெலுங்கில் வெளியான பாமகலாபம் 2 படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியாமணி மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியாமணி 'மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்சி' என்ற நவீன ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 75 லட்சம். குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று காரை வாங்கிய அவர் தனது மகிழ்ச்சியை அங்கு கேக் வெட்டி கொண்டாடினார். சமீபத்தில் பிரியாமணி ஐதராபாத்தில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது. பிரியாமணிக்கு பெங்களூரிலும் சொந்த வீடு உள்ளது.