துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‛திரிஷ்யம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி அதுவும் முதல் பாகத்திற்கு சமமான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இயல்பாகவே மூன்றாவது பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் ‛‛திரிஷ்யம் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களைப் போல மூன்றாம் பாகம் இருக்காது அதில் ஒரு புதுவிதமான ட்ரீட்மென்ட் கொடுக்க இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னை பொறுத்தவரை விதவிதமான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்னுடைய மெமரீஸ் மற்றும் திரிஷ்யம் படங்களை பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு இது போன்ற கதைகள் தான் நன்றாக இருக்கிறது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இது போன்ற த்ரில்லர் மற்றும் காமெடி படங்களையே தொடர்ந்து கொடுத்தால் ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும். அதனால் இந்த படத்திற்கு பிறகு கொஞ்ச நாளைக்கு நான் திரில்லர் பாதையை விட்டு விலகி பயணிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.