நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் அவர்களது ஒரு சில படங்களோ, அல்லது கதாபாத்திரங்களோ மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும். அப்படி ஒரு நடிகையாக 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் பிரியாமணி. ஹிந்தி நடிகை வித்யா பாலனின் நெருங்கிய உறவினர்.
2004ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வெளியான 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாடலிங் செய்து கொண்டிருந்தவரை முதன் முதலில் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. அப்படம் முடிந்தும் தாமதமாகவே வந்தது. அதற்கும் முன்னதாக பிரியமணி நடித்த தெலுங்குப் படமான 'எவரே அலகாடு' படம் வெளிவந்தது.
அமீர் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு என்ற கிராமத்து இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் பிரியாமணி. அவரது நடிப்பும், பேச்சும், தோற்றமும் தமிழ் சினிமாவின் சிறந்த பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக அந்த முத்தழகு கதாபாத்திரத்தைப் பேச வைத்தது, மறக்க முடியாமலும் செய்தது.
அதன்பின் தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'ஆபீசர்' படம் இன்று வெளியாகிறது. இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள தற்போது மும்பையில் இருக்கிறார்.