அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும் அவர்களது ஒரு சில படங்களோ, அல்லது கதாபாத்திரங்களோ மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும். அப்படி ஒரு நடிகையாக 'பருத்தி வீரன்' படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் பிரியாமணி. ஹிந்தி நடிகை வித்யா பாலனின் நெருங்கிய உறவினர்.
2004ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வெளியான 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாடலிங் செய்து கொண்டிருந்தவரை முதன் முதலில் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. அப்படம் முடிந்தும் தாமதமாகவே வந்தது. அதற்கும் முன்னதாக பிரியமணி நடித்த தெலுங்குப் படமான 'எவரே அலகாடு' படம் வெளிவந்தது.
அமீர் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு என்ற கிராமத்து இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் பிரியாமணி. அவரது நடிப்பும், பேச்சும், தோற்றமும் தமிழ் சினிமாவின் சிறந்த பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக அந்த முத்தழகு கதாபாத்திரத்தைப் பேச வைத்தது, மறக்க முடியாமலும் செய்தது.
அதன்பின் தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'ஆபீசர்' படம் இன்று வெளியாகிறது. இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள தற்போது மும்பையில் இருக்கிறார்.