பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
சைரன் படத்தை அடுத்து பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் விரைவில் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு தன்னிடமுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையில் நடிப்பதற்கு யோகி பாபுவிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறியிருக்கும் ஜெயம் ரவி, மேலும், இரண்டு படங்களை தானே இயக்கி நடிக்க போவதாக கூறியுள்ளார். அதனால் ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் படங்கள் இயக்கி நடித்து வரும் நிலையில், அடுத்து சிம்புவும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஷாலும் துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். இவர்கள் வரிசையில் விரைவில் ஜெயம் ரவியும் இணையப்போகிறார்.