22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சைரன் படத்தை அடுத்து பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் விரைவில் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு தன்னிடமுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையில் நடிப்பதற்கு யோகி பாபுவிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறியிருக்கும் ஜெயம் ரவி, மேலும், இரண்டு படங்களை தானே இயக்கி நடிக்க போவதாக கூறியுள்ளார். அதனால் ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் படங்கள் இயக்கி நடித்து வரும் நிலையில், அடுத்து சிம்புவும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஷாலும் துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். இவர்கள் வரிசையில் விரைவில் ஜெயம் ரவியும் இணையப்போகிறார்.