டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

சைரன் படத்தை அடுத்து பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் விரைவில் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு தன்னிடமுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையில் நடிப்பதற்கு யோகி பாபுவிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறியிருக்கும் ஜெயம் ரவி, மேலும், இரண்டு படங்களை தானே இயக்கி நடிக்க போவதாக கூறியுள்ளார். அதனால் ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் படங்கள் இயக்கி நடித்து வரும் நிலையில், அடுத்து சிம்புவும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஷாலும் துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். இவர்கள் வரிசையில் விரைவில் ஜெயம் ரவியும் இணையப்போகிறார்.