Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அண்ணனுக்கு மகனை தத்து கொடுத்தேன்: கிருத்திகா

20 டிச, 2023 - 02:15 IST
எழுத்தின் அளவு:
I-adopted-son-to-my-brother:-Krithika

மெட்டி ஒலி தொடரின் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா. அதன்பிறகு பல தொடர்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். உறவினரான அருண் என்பவரை பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதையும், தனது மகனை தத்து கொடுத்து விட்டதாகவும் தற்போது அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. விவாகரத்து முடிவை நான் உடனே எடுக்கவில்லை. ஆரம்பம் முதலே பிரச்னைகள் வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து எல்லோரும் பேசி இந்த முடிவிற்கு வந்தோம். அந்த சமயத்தில் எனக்கு ஒரே கவலை, என்னுடைய மகன் பின்னாளில் யாராவது தந்தை பற்றி கேட்கும் போது, சங்கடப்படுவானோ என்று நினைத்தேன். ஆனால், என்னுடைய அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறான். ஆகையால், நமக்கு அப்பா இல்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. காரணம், அண்ணனுக்கு குழந்தைகள் பிறக்கும் முன்னரே இவன் பிறந்து விட்டான்.

இவன் ரோகிணி நட்சத்திரம் என்பதால் இவன் அப்பா, அம்மாவுடன் இருக்க மாட்டான். தத்துக் கொடுக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தது. அந்த வகையில், என் அண்ணனுக்கு நான் இவனை தத்துக்கொடுத்து இருக்கிறேன். நான் தவறான முடிவு எடுக்க வில்லை என்று நினைக்கிறேன்.

கடினமான காலத்தை கடந்து வர எனக்கு குடும்பம்தான் உதவியது. எனக்கு அப்படி வாழ கொடுப்பினை இல்லையே என்று நான் வருத்தப்பட்டது கிடையாது. அதை நான் ஏற்றுக்கொண்டேன். என்னுடைய அம்மாவிற்கு நான் இரண்டாவதாக கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் யோசிக்கவில்லை. எனக்கு துணையாக என் மகனும், குடும்பமும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சரிகமப டைட்டில் வென்றார் கில்மிஷாசரிகமப டைட்டில் வென்றார் கில்மிஷா கோலாகலமாக துவங்கும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ-லோடட் 2 கோலாகலமாக துவங்கும் ஜீ தமிழின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in