ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் முக்கிய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஆனால் அமலாக்கத் துறையின் செய்தி குறிப்பில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்று இடம் பெற்றிருப்பதை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னை பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.




