‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
பவித்ரா ஜெயராம் என்ற டிவி நடிகை சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒன்றில் அகால மரணமடைந்தார். அவருடன் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்த நடிகர் சந்திரகாந்த் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தெலுங்குத் திரையுலகத்தையும், டிவி உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பவித்ரா விபத்தில் இறந்தபோது அதே காரில் சந்திரகாந்தும் இருந்துள்ளார். ஆனால், அவர் விபத்திலிருந்து தப்பித்துவிட்டார். இதனால், சந்திரகாந்த் மனமுடைந்து காணப்பட்டதாகத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் கூட மிகவும் கவலையுடன் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரும் ஏற்கெனவே வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். டிவி தொடரில் ஒன்றாக நடித்த போது காதல் மலர்ந்து லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்துள்ளனர்.