சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் |
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வீர தீர சூரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே கடந்த மாதம் 25ம் தேதி ஆரம்பமானது. மேலூர், கல்லம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 25 நாட்களாக நடந்து வந்த முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
ஆலங்குளம் ஊரில் உள்ள காய்கறி மார்க்கெட் ஒன்றில் கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்காக சென்ற வீடியோ ஒன்றை விக்ரம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். கூடியுள்ள ரசிகர்கள் கூட்டம் விக்ரமிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது. அவர்களுக்கு கையசைத்து தனது நன்றியைத் தெரிவித்தார் விக்ரம்.
“உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை… முதல் கட்டப் படப்பிடிப்பு பேக்-அப் ஆனது,” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்திப் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது. ஆனால், வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்கள். அப்படம் வெளிவருவதற்குள் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பையே முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.