நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மேடைபேச்சு, பட்டிமன்றம் மூலம் புகழ்பெற்றவர் சந்தியா. 'சவுண்டு சந்தியா' என்ற அவருக்கு பட்டப்பெயர்கூட உண்டு. தனது பேச்சுதிறனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு 'கண்மணி' சீரியலில் அறிமுகமான சந்தியா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சக்திவேல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'மெட்டி ஒலி' சாந்தியின் மருமகளாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தியின் நிஜ மருமகளாகவும் சந்தியா ஆகிறார். சாந்தியின் மகன் முரளிக்கும், சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இது பெற்றவர்கள் முடிவு செய்த திருமணமாம். திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது. அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மாமியாருக்கும், மருமகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.