கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர தொடர் 'சந்தியா ராகம்'. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தாரா தனிப்பட்ட காரணங்களுக்கு விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் சந்தியா ஜாகர்லமுடி, அந்தரா ஸ்வர்ணகர், ராஜீவ் பரமேஸ்வர், சுர்ஜித் குமார், அக்ஷயராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரம்மா தேவன், என்.பிரியன் இயக்குகிறார்கள்.




