ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் தொடரிலிருந்து அண்மையில் தான் ஹீரோ அக்னி விலகினார். அவர் விலகியதற்கு விபத்து தான் காரணம் என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவிகாந்தும் சீரியலை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவிகாந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக சொல்வது வதந்தி என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீண்ட நாட்களாக எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. இதுபற்றி பலமுறை கேட்டபோதும் இன்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை. இந்த தொடரில் கதாநாயகன் கூட இந்த பிரச்னையினால் தான் வெளியேறினார்' என்று கூறியுள்ளார்.