யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் தொடரிலிருந்து அண்மையில் தான் ஹீரோ அக்னி விலகினார். அவர் விலகியதற்கு விபத்து தான் காரணம் என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவிகாந்தும் சீரியலை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவிகாந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக சொல்வது வதந்தி என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீண்ட நாட்களாக எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. இதுபற்றி பலமுறை கேட்டபோதும் இன்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை. இந்த தொடரில் கதாநாயகன் கூட இந்த பிரச்னையினால் தான் வெளியேறினார்' என்று கூறியுள்ளார்.