ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மிர்ச்சி சிவா நடித்த வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. மேலும், பேப்பர் ராக்கெட் என்ற ஒரு வெப் தொடரையும் அவர் இயக்கினார். இது ஜீ5 சேனலில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது மூன்றாவது படத்தை ஜெயம் ரவி- நித்யா மேனன் ஆகியோரை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.