‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை வென்ற 1983ம் ஆண்டு அணி கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். அந்தக் காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு முன்பு இருந்ததில்லை. பல சாதனைகளைப் படைத்தவர். அவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும், சிறப்பும் ஆகும்,” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சந்தித்துப் பேசி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்த், கபில்தேவ் சந்திப்பு பற்றி சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.