காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆத்மிகா. சமீபகாலமாக ஆன்மிகத்திலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஆத்மிகா, சமீபத்தில் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்திருக்கிறார்.
அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்கார்ந்த போது அது ஆழமானதாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு நிபந்தனையின்றி பாபாஜியை குருவாக ஏற்றுக் கொண்டேன். உலகில் உள்ள எந்த ஒரு மனிதரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பாபாஜியின் குகைக்கு சென்று தியானம் செய்து அதை அனுபவிக்க வேண்டு''ம் என்று ஆத்மிகா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.