இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் |

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையில் உருவான மதராஸி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அவரிடம் இதுவரை நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛ஏற்கனவே நடித்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க வேண்டும் என்கிறபோதே பயமாக உள்ளது. காரணம் அதற்கேற்ற கதை கிடைக்க வேண்டும். அதோடு, முதல் பாகத்தின் வெற்றியும் பாதித்து விடக்கூடாது. நான் இதுவரை நடித்த படங்களில் மாவீரன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிப்பதற்கு தான் ஆசையாக உள்ளேன். அது தனித்துவமான கதை'' என்று தெரிவித்துள்ளார் .
மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். அசரீரி குரலாக விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார்.