சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையில் உருவான மதராஸி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அவரிடம் இதுவரை நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛ஏற்கனவே நடித்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க வேண்டும் என்கிறபோதே பயமாக உள்ளது. காரணம் அதற்கேற்ற கதை கிடைக்க வேண்டும். அதோடு, முதல் பாகத்தின் வெற்றியும் பாதித்து விடக்கூடாது. நான் இதுவரை நடித்த படங்களில் மாவீரன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிப்பதற்கு தான் ஆசையாக உள்ளேன். அது தனித்துவமான கதை'' என்று தெரிவித்துள்ளார் .
மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். அசரீரி குரலாக விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார்.