தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையில் உருவான மதராஸி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அவரிடம் இதுவரை நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛ஏற்கனவே நடித்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க வேண்டும் என்கிறபோதே பயமாக உள்ளது. காரணம் அதற்கேற்ற கதை கிடைக்க வேண்டும். அதோடு, முதல் பாகத்தின் வெற்றியும் பாதித்து விடக்கூடாது. நான் இதுவரை நடித்த படங்களில் மாவீரன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிப்பதற்கு தான் ஆசையாக உள்ளேன். அது தனித்துவமான கதை'' என்று தெரிவித்துள்ளார் .
மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். அசரீரி குரலாக விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார்.