காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. கோவை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், அதன் பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மிஸ் மேகி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு அருகே ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் ஆத்மிகா. அதுகுறித்து அவர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது வறுமையில் வாழும் உயிர்களுக்கு உதவுவது தான் ஆன்மிகத்தின் உச்சமாகும். சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வருகிறது. அதனால் கூடிய சீக்கிரமே சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் ஆத்மிகா.