'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. கோவை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், அதன் பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மிஸ் மேகி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு அருகே ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் ஆத்மிகா. அதுகுறித்து அவர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது வறுமையில் வாழும் உயிர்களுக்கு உதவுவது தான் ஆன்மிகத்தின் உச்சமாகும். சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வருகிறது. அதனால் கூடிய சீக்கிரமே சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் ஆத்மிகா.