என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன்பிறகு, கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'நரகாசூரன்' படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே உதயநிதி உடன் இவர் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படம் மார்ச் 17ல் வெளியாகிறது. இப்படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது: காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் பண்ணவில்லை. என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார். ஆனால் அதற்காக தற்போது மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் போதும். பணமா, புகழா எது முக்கியமென்றால் பணம்தான் முக்கியம் என்பேன். ஏனெனில் அதுதான் எதார்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.