முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு |

குனீத் மோங்கா தயாரிப்பில், கார்டிகி கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற டாகுமெண்டரி குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1969ம் வருடம் இதே பிரிவில் 'த அவுஸ் தட் ஆனந்தா பில்ட்' என்ற குறும்படமும், 1979ம் ஆண்டு 'அன் என்கௌன்டர் வித் பேசஸ்' என்ற படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிட்டன. ஆனால், அவை விருதுகளை வெல்லவில்லை.
முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதிகளைப் பற்றிய கதையாக இந்த 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது கதையுடன் அந்த தேசியப் பூங்காவில் ஆதரவற்று வந்த ரகு என்ற யானையை அவர்கள் வளர்ப்பது பற்றியும், பின் அது அவர்களை விட்டு செல்வது பற்றியும் ஒரு உணர்வுபூர்வமான படமாக அது அமைந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டு இந்த குறும்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது.