20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், சந்திரபோஸ் எழுதி, ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா பாடிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் பாடல் வெளிவந்த சமயத்திலிருந்தே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது. அப்பாடலுக்காக பிரேம் ரக்ஷித் நடன இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஆடிய அதிரடி நடனமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் இப்போது பெருமைக்குரிய ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் மேலும் ஒரு பெருமை மிகு சாதனையைப் படைத்துள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் அந்தப் பாடலை ஆஸ்கர் மேடையில் ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா இருவரும் பாடினர். அவர்கள் பாடி முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். அவர்களது பாடுவதற்கு முன்பு அதற்கான அறிவிப்பை இந்திய நடிகையான தீபிகா படுகோனே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் எழுதிய சந்திரபோஸ் மேடையேறி ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர். இந்தியத் தயாரிப்பான 'ஆர்ஆர்ஆர்' படம் பெற்றுள்ள இந்த விருது இந்தியத் திரையுலகத்திற்குப் பெருமையைச் சேர்த்துள்ளது.