புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மு .மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இணைந்து நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் கண்ணை நம்பாதே. இப்படத்தில் ஆத்மிகா, பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான ஆத்மிகா, கண்ணை நம்பாதே படத்தை 90 வயதை கடந்த தனது தாத்தாவுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு தனது பேத்தி நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர் படிக்கட்டுகளில் அவர் ஆர்வமுடன் ஏறி வந்திருக்கிறார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ஆத்மிகா, ‛‛90க்கும் அதிகமான வயது கொண்ட எனது தாத்தா, அவரது பேத்தி படத்தை பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் எனக்கு பொக்கிஷமாக இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஆத்மிகா .